ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Saturday 30 August 2014

வலைப் பதிவர் சந்திப்பு - திருவிழா - மதுரை - 26.10.2014

தமிழ்ப் பதிவுலக நண்பர்களுக்கு வணக்கம்... 
கடந்த வருடம் 2012 ஆகஸ்டு மாதம் 26-ம் நாள் அன்றும், 2013 செப்டம்பர் மாதம் 1-ம் தேதி அன்றும் சென்னையில் நடந்த மாபெரும் பதிவர் சந்திப்பை, அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. அதே போல்..... 

மூன்றாம் ஆண்டு பதிவர் சந்திப்பிற்கான வேலைகள் ஆரம்பித்து விட்டன... 

நாள் : அக்டோபர் 26-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை

நேரம் : காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை

இடம் : மாரியம்மன் தெப்பக்குளம் மேலவீதியிலுள்ள கீதா நடனகோபால நாயகி மந்திர், மதுரை.

வாருங்கள் வலைப்பதிவர்களே... வலைப்பதிவர் சந்திப்பு திருவிழாவில் பங்கேற்கும் பதிவர்கள் அனைவரும் கீழுள்ள படிவத்தை நிரப்பி எங்களுக்கு அனுப்பினால் போதும்... 

படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய கடைசி நாள் 15.10.2014 ஏதேனும் சந்தேகங்கள், விவரங்கள் தேவைப்பட்டால் :- 
திண்டுக்கல் தனபாலன் - 9944345233 - dindiguldhanabalan@yahoo.com
 தமிழ்வாசி பிரகாஷ் -9080780981 - thaiprakash1@gmail.com

நூல் வெளியீடு : பதிவர்கள் தங்களின் நூல்களை இந்த மாபெரும் நிகழ்ச்சியில் வெளியிடலாம். அவ்வாறு நூல் வெளியிட விரும்பும் பதிவர்கள் வரும் 10.10.2014 க்குள் விவரங்களை கீழ்கண்ட நண்பர்களை தொடர்பு கொள்ளுங்கள். 
சீனா ஐயா (வலைச்சரம்) cheenakay@gmail.com
திண்டுக்கல் தனபாலன் - 9944345233 - dindiguldhanabalan@yahoo.com

அன்பளிப்பு : இந்தச் சந்திப்பு மிகவும் சிறப்பாக நடைபெற பொருளாதாரம் மிக முக்கியமானது. எனவே நன்கொடை கொடுக்க விருப்பப்படும் உள்நாட்டு, வெளிநாட்டுப் பதிவர்கள், திண்டுக்கல் தனபாலன் மற்றும் தமிழ்வாசி பிரகாஷ் அலைபேசி எண்ணிலோ அல்லது மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளவும். பணத்தை அனுப்பும் வழிமுறைகள் குறித்துத் தனி அஞ்சலில் தெரிவிக்கப்படும். 


மேலும் தகவல்கள் / விபரங்கள் அடுத்தப் பதிவில் வெளியாகும். பதிவர்கள் இந்த விபரங்கள் குறித்து தங்களது வலைப்பதிவில் எழுதி அனைத்து பதிவர்களுக்கும் எடுத்துச் செல்லுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி. சந்திப்போம்.
வலைப்பதிவர் விழா நிர்வாகக் குழு - மதுரை

23 comments:

cheena (சீனா) said...

சோதனை மறுமொழி

cheena (சீனா) said...

வலைப் பதிவர் சந்திப்பிற்கு வருகை தரக் காத்திருக்கும் அருமை நண்பர்களே!

26.10.2014 அன்று மதுரையில் நடைபெறும் வலைப் பதிவர் சந்திப்பு -திரு விழா - மதுரையில் சந்திப்போம்.

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

கரந்தை ஜெயக்குமார் said...

மதுரையில் தங்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் ஐயா

துரை செல்வராஜூ said...

விழா சிறப்புடன் நிகழ நல்வாழ்த்துக்கள்.. வாழ்க நலம்!..

இராஜராஜேஸ்வரி said...


மூன்றாம் ஆண்டு பதிவர் சந்திப்பிற்கான வேலைகள் ஆரம்பித்து விட்டன... //

சிறப்புற விழா நடைபெற
இனிய வாழ்த்துகள்.!

Jaleela Kamal said...

விழா சிறப்பாக நடை பெற வாழ்த்துக்கள்..

வெங்கட் நாகராஜ் said...

விழா சிறக்க எனது வாழ்த்துகளும்.

சென்னை பித்தன் said...

அகத்தியர் இமயம் செல்ல வேண்டும்!
விழா சிறப்பாக நடந்தேற வாழ்த்துகள்

'பரிவை' சே.குமார் said...

விழா சிறக்க வாழ்த்துக்கள் ஐயா....

cheena (சீனா) said...

அன்பின் சக பதிவர்களே !

இங்கு வந்து வாசித்து மகிழ்ந்து மறுமொழிகளும் இட்ட அனைத்துப் பதிவர்களூக்கும் நன்றி -

திருவிழாவிற்கும் வந்து கலந்து கொள்ள முயலவும்.

நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

காமாட்சி said...

விழா கோலாஹலமாகவும்,பயனுள்ளதாக அமையவும் என் நல் வாழ்த்துகள்.
ஸெப்டம்பர் மூன்றாம் தேதிய உங்கள்
திருமண நல்ல நாளிற்கும் என்னுடைய மனமார்ந்த ஆசிகளும் நல் வாழ்த்துகளும். அன்புடன்
சொல்லுகிறேன். காமாட்சிமஹாலிங்கம்.

Unknown said...

முதல் நாளே என் வருகையை பதிவு செய்து விட்டேன் !
த ம 3

துளசி கோபால் said...

கோபாலும் நானும் வருகின்றோம். அனைவரையும் சந்திக்க ஆவல்.

cheena (சீனா) said...

அன்பின் துளசி - மிக்க மகிழ்ச்சி - தாங்களும் தம்பதி சமேதராக பதிவர் சந்திப்பில் கலந்து கொள்வது குறித்து மிக்க மகிழ்ச்சி - ஏற்பாடுகள் செய்வோம். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

துளசி கோபால் said...

நன்றிகள் பல!

தி.தமிழ் இளங்கோ said...

அன்பின் சீனா அவர்களுக்கு வணக்கம்! தங்களது சீரிய முயற்சியில் மதுரையில் நடைபெற இருக்கும் வலைப்பதிவர் சந்திப்பு விழாவிற்கு நன்றியும், வாழ்த்துக்களும். விரைவில் விண்ணப்ப படிவத்தையும் எனது நன்கொடையையும் அனுப்பி வைக்கிறேன். விழா நடைபெறும் இடத்திற்கான விவரம் ( பஸ் ரூட் முதலானவை ) பற்றி ஒரு பதிவில் தெரிவிக்கவும்.

cheena (சீனா) said...

அன்பின் தமிழ் இளங்கோ

மதுரைக்கு வந்து விட்டீர்களென்றால் அழைத்தச் செல்வதற்கு எல்லா ஏற்பாடுகளூம் செய்வோம். புகை வண்டியா - பேருந்தா ? திருச்சி - மதுரை எப்படி வருகிறீர்கள் ? முன் கூட்டியே தெரிவிக்கவும் - ஆவன் செய்வோம் -சந்திப்பு நடக்கும் இடத்திற்கு புகை வண்டி நிலையம் / பேருந்து நிலையம் - இங்கிருந்தெல்லாம் சந்திப்பு நடக்கும் இடத்திற்கு எப்படி வர வேண்டும் என்றே தங்கள் விருப்பப் படி ஒரு பதிவு போடுகிறோம். அக்டோபர் முதல் வாரத்தில் - தங்கள் விருப்பம் நிறைவேறும்.

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

அன்பின் அய்யா. வணக்கம்.
இன்றுதான் தங்கள் தளத்தினைத் தொடர்வோனாகப் பதிவு செய்தேன்.
மதுரை வலைப்பதிவர் திருவிழா நம் தமிழ்வலைப்பதிவர் அனைவரையும் இணைக்கட்டும். வணக்கம்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

மூன்றாம் ஆண்டு பதிவர் சந்திப்பு விழா

மதுரை மாநகரில் சிறப்புற நடைபெற இனிய நல்வாழ்த்துகள்.!

மதுரை சரவணன் said...

ஆவலோடு அனைவருக்காவும் காத்திருக்கின்றது மதுரை. அனைவரையும் அன்போடு எதிர் நோக்கியே சீனா அய்யாவுடன் நானும் இணைந்தே வரவேற்கின்றேன்.

மதுரை சரவணன் said...

ஆவலோடு அனைவருக்காவும் காத்திருக்கின்றது மதுரை. அனைவரையும் அன்போடு எதிர் நோக்கியே சீனா அய்யாவுடன் நானும் இணைந்தே வரவேற்கின்றேன்.

மதுரை சரவணன் said...

ஆவலோடு அனைவருக்காவும் காத்திருக்கின்றது மதுரை. அனைவரையும் அன்போடு எதிர் நோக்கியே சீனா அய்யாவுடன் நானும் இணைந்தே வரவேற்கின்றேன்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

மதுரையில் சந்திப்போம்.